மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு தயார் என விவசாய சங்கங்களுக்கு கடிதம்

அனைத்துப் பிரச்சினைகளையும் விவாதிக்கத் தயார் பேச்சுவார்த்தைக்கு வருமாறும் விவசாய சங்கங்களுக்கு மத்திய அரசு கடிதம்

அனைத்துப் பிரச்சினைகளையும் விவாதிக்கத் தயாராக இருப்பதாகவும் பேச்சுவார்த்தைக்கு வருமாறும் விவசாய சங்கங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. மத்திய அரசுத் தரப்பில் மூன்றாவது முறையாக கடிதம் எழுதப்பட்டுள்ளது. இன்று டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகள் 30வது நாளாக கடும் குளிரிலும் பனியிலும் வெட்டவெளிகளில் உண்டு உறங்கி போராட்டத்தைத் தொடர்கின்றனர். இதுவரை 5 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதும் எந்த விதத் தீர்வும் அடையவில்லை. வேளாண் சட்டங்களில் திருத்தங்களை ஏற்கமாட்டோம்சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று விவசாய சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன

Translate »
error: Content is protected !!