மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ்வர்தன் பதவி விலகல்

இன்று மாலை 6 மணிக்கு மத்திய அமைச்சரவை விரிவுபடுத்தப்பட்டு மறுசீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டில் பிரதமர் மோடி இரண்டாவது முறையாக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக அமைச்சரவை விரிவாக்கப்பட உள்ளது. 43 பேர் இன்று அமைச்சர்களாக பொறுப்பேற்க உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையில், மத்திய அமைச்சர்கள் சிலர் அடுத்தடுத்து ராஜினாமா செய்கிறார்கள். இது தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் கங்குவார் ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர். இதேபோல், மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பதவி விலகியுள்ளார்.

 

Translate »
error: Content is protected !!