மராட்டியத்தில் நேற்று ஒரே நாளில்7.85 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

மராட்டியத்தில் நேற்று ஒரே நாளில் 7 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசி போட்டதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து சுகாதார செயலாளர் துணை வியாஸ் கூறுகையில், “நாங்கள் எங்கள் பழைய சாதனையை முறியடித்தோம்.

நேற்று இரவு 7 மணி நிலவரப்படி, மராட்டிய மாநிலத்தில் 7 லட்சம் 85 ஆயிரம் 311 பேருக்கு தடுப்பூசி போட்டுள்ளோம். இது மாநிலத்தில் அதிக எண்ணிக்கையில் உள்ளது. இது விரைவில் 8 லட்சம் என்ற இலக்கை எட்டும். மாநிலத்தில் இதுவரை 3 கோடி 38 லட்சம் 57 ஆயிரம் 372 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!