மருத்துவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் – பிரதமர் மோடிக்கு கெஜ்ரிவால் கடிதம்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியதாவது:

கொரோனாவுக்கு எதிரான போரில் எண்ணற்ற மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உயிர் இழந்துள்ளனர். அவர்களுக்கு பாரத் ரத்னா விருது வழங்குவதே அவர்களுக்கு உண்மையான அஞ்சலி.

மேலும், லட்சக்கணக்கான மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துணை மருத்துவர்களும் தங்கள் வாழ்க்கையையும் குடும்பத்தையும் பற்றி கவலைப்படாமல் மக்களுக்கு சேவை செய்கிறார்கள். அவர்களுக்கு நன்றி மற்றும் மரியாதை செலுத்துவதற்காக பாரத ரத்னா விருதை வழங்குவதை விட சிறந்த வழி எதுவுமில்லை. தனிநபரைத் தவிர பாரத ரத்னாவை மொத்தமாக வழங்க விதி அனுமதிக்கவில்லை என்றால், விதியை மாற்ற வேண்டும். மருத்துவர்களுக்கு  பாரத் ரத்னா வழங்கப்பட்டால் ஒவ்வொரு குடிமகனும் மகிழ்ச்சியாக இருப்பார் என்றார்.

Translate »
error: Content is protected !!