மருத்துவர்கள் பற்றாக்குறை… பல் மருத்துவர்களை பயன்படுத்துங்கள் – உயர்நீதிமன்றம் உத்தரவு

கொரோனா சிகிச்சைக்கு மருத்துவர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், பல் மருத்துவர்களை பயன்படுத்துமாறு உத்தரகாண்ட் மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது தொடர்பான வழக்கில், உத்தரகாண்ட் மாநிலத்தின் டெஹ்ராடூன், ஹல்த்வானி மற்றும் ஹரித்வாரில் நாள்தோறும் 50 ஆயிரம் ஆர்டிபிசிஆர் சோதனைகளை நடத்த உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், மருத்துவர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட இரண்டாயிரத்து 500 பல் மருத்துவர்களின் உதவியை நாடுமாறு மாநில அரசுக்கு உயர் நீதிமன்றம் ஆலோசனை வழங்கியுள்ளது.

Translate »
error: Content is protected !!