மும்பைக்கு வெளியநாட்டில் இருந்து வந்த 627 பேர் தனிமைப்படுத்தப்பட்டுளனர்

வெளிநாடுகளில் இருந்து நேற்று ஒரே நாளில் மும்பை வந்த 627 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.

இங்கிலாந்து நாட்டில் புதுவகை கொரோனா வைரஸ் உருவாகி அது பல்வேறு நாடுகளிலும் பரவ தொடங்கி உள்ளது. இந்தியாவிலும் இந்த வகை கொரோனா நுழைந்து பரவி வருகிறது. எனவே இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து வருபவர்களை தனிமைப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டது.

அதன்படி மராட்டியத்திற்கு வரும் பயணிகள் 7 நாட்கள் அரசு கண்காணிப்பில் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில் நேற்று ஒரே நாளில் இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள், தென் ஆப்பிரிக்காவில் இருந்து 18 விமானங்களில் 1,435 பயணிகள் மும்பை வந்து இறங்கினர்.

இதில் மும்பையில் 627 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். 92 பேருக்கு தனிமைப்படுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. மற்றவர்கள் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள். அவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்

Translate »
error: Content is protected !!