மும்பை அருகே மகாராஷ்டிரா மாநிலத்தில் 150 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்தது: 5 பேர் பலி…..7 பேர் காயம்

மும்பை,

மகாராஷ்டிரா மாநிலத்தில் 150 அடி பள்ளத்தில் வேன் கவிழ்ந்து 5 பேர் பலியானார்கள்.7 பேர் காயமடைந்தனர்.

மகாராஷ்டிா மாநிலம் நந்தூர்பார் மாவட்டம் ஜாபி பாலாய் மலைக் கிராமத்தை சேர்ந்த மக்கள் சிலர் தங்கள் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக ஒரு வேனில் டோரன்மால் மலை வாசஸ்தலத்திற்கு வந்து கொண்டிருந்தனர்.

காலை 10.30 மணியளவில் கட்கி மலை பாதையில் வந்து கொண்டு கெண்டிருந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த வேன் 150 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்தது. தகவல் கிடைத்ததும் காவல்துறையினர் மற்றும் மீட்பு பிரிவினர் விரைந்து வந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந்த விபத்தில் 5 பேர் பலியானார்கள். 7 பேர் காயமடைந்துள்ளனர். காய மடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்றும், மீட்பு நடவடிக்கை வேகமாக நடைபெற்று வருவதாகவும் நந்தூர்பரின் காவல்துறை கண்காணிப்பாளர் மகேந்திர பண்டிட் கூறியுள்ளார்.

 

Translate »
error: Content is protected !!