மும்பை, தானேவில் இன்று பலத்த மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

மும்பை மற்றும் தானேவில் இன்று பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதேபோல், புனே, ராய்காட், ரத்னகிரி, கோலாப்பூர் மற்றும் சத்தாரா மாவட்டங்களில் ரெட் அலர்ட் வழங்கப்பட்டுள்ளது.

24 மணி நேரத்தில் சுமார் 20 செ.மீ. மழைக்கான வாய்ப்பு உள்ளது. நாளை முதல் மழையின் தீவிரம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கனமழை காரணமாக மும்பை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது.

Translate »
error: Content is protected !!