மேற்கு வங்காள மாநிலத்தின் விளையாட்டுத்துறை மந்திரி ராஜினாமா

மேற்கு வங்காள மாநிலத்தின் விளையாட்டுத்துறை மந்திரியாக இருந்து வந்த லட்சுமி ரத்தன் சுக்லா, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தமிழகத்துடன் மேற்கு வங்காளத்திற்கும் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த முறை எப்படியாவது ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என பா.ஜனதா களம் இறங்கியுள்ளது. முதற்கட்டமாக மம்தா கட்சியில் உள்ள முக்கிய தலைவர்களை தங்களது பக்கம் இழுத்து வருகிறது.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவராக விளங்கிய சுவேந்து அதிகாரியை முன்னதாக இழுத்தது. அவர் போக்குவரத்துத்துறை மந்திரி பதவியை ராஜினாமா செய்து விட்டு, ஆதரவாளர்களுடன் பா.ஜனதாவில் இணைந்தார்.

இணைந்த உடனே கொல்கத்தா ஸ்தம்பிக்கும் வகையில் ரோடு ஷோ நடத்தினார். இந்த நிலையில் மேற்கு வங்காள மாநிலத்தின் விளையாட்டுத்துறை மந்திரியான லட்சுமி ரத்தன் சுக்லா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

.

 

Translate »
error: Content is protected !!