ரஜினியுடன் அதிமுக கூட்டணி அமைக்கலாம்: ஓ.பி.எஸ். கருத்தால் பரபரப்பு

வாய்ப்பு இருந்தால் ரஜினிகாந்த் கட்சியுடன் அதிமுக கூட்டணி அமையலாம் என்று துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கருத்து தெரிவித்துள்ளார்.

வரும் ஜனவரியில் அரசியல் கட்சி தொடங்குவதாக, நடிகர் ரஜினிகாந்த் இன்று அறிவிப்பு வெளியிட்டார். அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அவரது இந்த அறிவிப்பை பலரும் வரவேற்றும், விமர்சனம் செய்தும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இது குறித்து முதல்வர் பழனிச்சாமியிடம் செய்தியாளர்கல் கேள்வி எழுப்பியபோது, ரஜினியின் அறிக்கையை படிக்கவில்லை; படித்தான் தான் கருத்து தெரிவிக்க முடியும் என்று கூறிவிட்டார்.

அதே நேரம், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், நடிகர் ரஜினி புதிய கட்சி துவங்க உள்ளதை வரவேற்பதாக தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், ரஜினியின் அரசியல் வரவு, நல்வரவாகட்டும் என்று தெரிவித்தார்.

ரஜினி – அதிமுக கூட்டணி அமையுமா என்கிற கேள்விக்கு, எதிர்வரும் காலத்தில் எதுவும் நிகழலாம் என்று ஓ. பன்னீர்செல்வம் பதிலளித்தார். வாய்ப்பு இருந்தால் ரஜினி – அதிமுக கூட்டணி அமையலாம். அதேநேரம், ரஜினிகாந்த் கட்சி துவங்குவதால் அதிமுக வாக்கு வங்கியில் எந்த பாதிப்பு இருக்காது எனவும் ஓ.பன்னீர் செல்வம் குறிப்பிட்டார்.

அதிமுக -ரஜினி கூட்டணி அமையலாம் என்று துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்திருப்பது, அரசியல் வட்டாரங்களில் பரபரப்பையும் முக்கியத்துவத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

Translate »
error: Content is protected !!