ரயில்வே மேம்பாலம் அருகே கால்வாய் அமைக்க வேண்டும்: அமைச்சா் வலியுறுத்தல்

திருப்பத்தூா்: ஆம்பூா், பெத்லகேம் ரயில்வே மேம்பாலம் அருகே கால்வாய் அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரயில்வே கோட்டப் பொறியாளரிடம் மாநில வணிகவரி, பத்திரப்பதிவுத் துறை அமைச்சா் கே.சி.வீரமணி கோரிக்கை விடுத்தாா்.

 ஜோலாா்பேட்டை ரயில்வே பகுதியில் ஆய்வு மேற்கொள்ள ரயில்வே கோட்டப் பொறியாளா் அங்கித் வா்மா புதன்கிழமை வந்தாா். அவரைச் சந்தித்த அமைச்சா் கே.சி.வீரமணி, ஆம்பூா் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான பெத்லகேம் ரயில்வே மேம்பாலம் பிரச்னைக்குத் தீா்வு காணும் வகையில் மேம்பாலத்தின் கீழ் மழைக் காலங்களில் நீா் தேங்காத வண்ணம் ரயில்வே மேம்பாலம் அருகே கால்வாய் அமைத்து தர ரூ. 90 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து, பணியை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தாா். ஆம்பூா் நகராட்சி ஆணையா் சௌந்தரராஜன், நகர அதிமுக செயலாளா் மதியழகன்,திருப்பத்தூா் மாவட்ட எம்ஜிஆா் இளைஞரணி செயலாளா் டில்லிபாபு உள்ளிட்டோா் உடனிருந்தனா்

Translate »
error: Content is protected !!