ராஜஸ்தான், உத்தர பிரதேசத்தில் கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட மின்னல் தாக்கியதில் மொத்தம் 28 பேர் உயிரிழந்து உள்ளனர். 10 ஆடுகள், ஒரு பசு என மொத்தம் 13 கால்நடைகளும் உயிரிழந்தன.
இவர்களில் 18 பேர் ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள். அவர்களில் 7 குழந்தைகள் உள்ளனர். அவர்களில் ஜெய்ப்பூரில் உள்ள அம்பர் கோட்டைக்கு அருகிலுள்ள மலைகளில் செல்ஃபி எடுத்துக்கொண்டவர்களும் அடங்குவர். மேலும், 6 குழந்தைகள் உட்பட 21 பேர் காயமடைந்தனர். உத்தரபிரதேசத்தின் பல பகுதிகளில் பெய்த கனமழையில் இரண்டு இளைஞர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களைத் தவிர, உத்தரகண்ட் மாநிலத்தில் பெய்த மழையில் 8 வயது சிறுவன் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.