ராஜஸ்தான், உத்தர பிரதேசத்தில் மின்னல் தாக்கி 28 பேர் பலி

ராஜஸ்தான், உத்தர பிரதேசத்தில் கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட மின்னல் தாக்கியதில் மொத்தம் 28 பேர் உயிரிழந்து உள்ளனர்.  10 ஆடுகள், ஒரு பசு என மொத்தம் 13 கால்நடைகளும் உயிரிழந்தன.

இவர்களில் 18 பேர் ராஜஸ்தானைச் சேர்ந்தவர்கள். அவர்களில் 7 குழந்தைகள் உள்ளனர். அவர்களில் ஜெய்ப்பூரில் உள்ள அம்பர் கோட்டைக்கு அருகிலுள்ள மலைகளில் செல்ஃபி எடுத்துக்கொண்டவர்களும் அடங்குவர். மேலும், 6 குழந்தைகள் உட்பட 21 பேர் காயமடைந்தனர். உத்தரபிரதேசத்தின் பல பகுதிகளில் பெய்த கனமழையில் இரண்டு இளைஞர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களைத் தவிர, உத்தரகண்ட் மாநிலத்தில் பெய்த மழையில் 8 வயது சிறுவன் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

 

Translate »
error: Content is protected !!