ஜம்மு காஷ்மீரின் சோபியான் மாவட்டம் கனிகாம் பகுதியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து இன்று காலையில் அந்த பகுதிக்கு சென்ற பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் தேடுதல் வேட்டையை ஆரம்பித்தனர். அப்போது, பயங்கரவாதிகள் பாதுகாப்பு படயினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். நீண்ட நேரம் நடந்த இந்த சண்டையில் 2 பயங்கரவாதிகள் சுடப்பட்டனர். தொடர்ந்து தேடுதல் வேட்டை போய்க்கொண்டு இருக்கிறது .