ராமநாதபுரம் மாவட்ட கழகம் சார்பில் புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

ராமநாதபுரம் மாவட்ட கழகம் சார்பில் புரட்சித்தலைவி ஜெயலலிதா பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

பரமக்குடி,

மறைந்த முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்ட அதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் முனியசாமி அறிவுறுத்தலின் பேரில் பரமக்குடி பேருந்து நிலையம் அருகே அவரது திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சதன்  பிரபாகர் கலந்து கொண்டு கழகக் கொடி ஏற்றி வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

அதனை தொடர்ந்து பரமக்குடி நகரின் முக்கிய பகுதிகளில் கழக கொடி ஏற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் நகர அம்மா பேரவை செயலாளர் வடமலையான் நகர செயலாளர் கணேசன், ஒன்றிய செயலாளர் முத்தையா, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் அப்துல்மாலிக், கண்ணன், மற்றும் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Translate »
error: Content is protected !!