விவசாயிகள் பிரச்சினை: எம்பிக்களுடன் கனி மொழி சந்திப்பு

3 வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கனிமொழி இன்று சந்திப்பு.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தீவிர போராட்டங்களை அரங்கேற்றி வருகின்றனர்.  விவசாயிகள் இன்று 71-வது நாளாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டங்களுக்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் ஆதரவு அளித்து வருகின்றன.

இந்நிலையில், போராடும் விவசாயிகளுக்கு குடிநீர், இணைய தள சேவை உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. அவர்களை எதிரிகளைப் போல் அரசு நடத்துகிறது. அவர்கள் பிரச்சனையை கேட்டறிய டெல்லி காசிப்பூர் எல்லையில் உள்ள விவசாயிகளை நேரில் சந்திக்க எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கனிமொழி சந்திப்பு.

Translate »
error: Content is protected !!