100-வது நாளாக விவசாயிகள் போராட்டம்… !  மத்திய அரசின் பதில் என்ன.?

இந்த மண்ணையும் இந்த மண்ணின் மக்களையும் வாழவைக்க 100 வது நாளாக தொடர்ந்து விவசாயிகள் போராட்டம் நடத்திவருகின்றனர்.

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநில விவசாயிகள் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குடியரசு தினத்தன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணி பெரும் வன்முறையில் முடிந்தது. இந்நிலையில், விவசாயிகளின் போராட்டம் இன்று 100வது நாளை எட்டியுள்ளது.

இதனையொட்டி, டெல்லியில் இருந்து ஹரியானாவை இணைக்கும் குண்ட்லிமனேசர், பல்வால் விரைவுச் சாலையில் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை மறியலில் ஈடுபடப் போவதாக விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. அப்போது அந்த சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்க அனுமதிக்கப்பட மாட்டாது.

மேலும், நாடு முழுவதும் இன்று வீடுகளில் கருப்பு கொடி கட்டி ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று விவசாய சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.  மத்திய அரசு விவசாயிகளுடன் 11 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் தோல்வியில் முடிந்துள்ளது. வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை வீடு திரும்பப் போவதில்லை என்று கூறி போராடி வரும் விவசாயிகளின் போராட்டம் இன்று 100வது நாளை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Translate »
error: Content is protected !!