இந்தியாவில் புதிதாக 1,41,986 பேருக்கு கொரோனா.. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை மீண்டும் 5 லட்சத்தை நெருங்கியது

இந்தியாவில், நேற்று 1,17,100 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் 1,41,986 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 53 லட்சத்து 68  ஆயிரத்து 312 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 40,895 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், நாட்டில் கொரோனாவிலிருந்து மீண்டு வருபவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடி 44 லட்சத்து 12 ஆயிரத்து 740 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் 2,85,401 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தாக்குதலில் 285 பேர் உயிரிழந்தனர். இதனால், இந்தியாவில் மொத்த கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை 4 லட்சம் 83 ஆயிரம் 463 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 4,72,169 பேர் தற்போது கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 1,50,61,92,903 பேருக்கு (கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 90,59,360 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!