மும்பையில் இன்று முதல் வரும் 7ம் தேதி வரை 144 தடை உத்தரவு

ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதால் மும்பையில் இன்று முதல் வரும் ஜனவரி 7ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு மக்கள் வெளியே வந்து கூடினால் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதால் மாநகர காவல் துறையினர் தடை உத்தரவு பிறப்பித்துள்ளனர். மும்பையில் நேற்று ஒரே நாளில் 2,510 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதில் 53 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

Translate »
error: Content is protected !!