இந்தியாவில் புதிதாக 15,981 பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 15,981 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 40 லட்சத்து 53 ஆயிரத்து 573 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 17,861 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், நாட்டில் கொரோனாவிலிருந்து மீண்டு வருபவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடி 33 லட்சத்து 99 ஆயிரத்து 961 ஆக உயர்ந்துள்ளது.

இருப்பினும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தாக்குதலில் 166 பேர் உயிரிழந்தனர். இதனால் , இந்தியாவில் மொத்த கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை 4 லட்சம் 51 ஆயிரம் 980 ஆக உயர்ந்துள்ளது.

Translate »
error: Content is protected !!