செல்போன் திருடிய இளைஞர்கள் 2 பேர் கைது

புதுச்சேரியில் உள்ள காய்கறி அங்காடியில், பணம் மற்றும் செல்போனை திருடிச் சென்ற இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.

லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் அரவிந்த்குமார் என்பவர் காய்கறி அங்காடி நடத்தி வருகிறார். இந்த நிலையில், காலை கடைக்கு வந்து பார்த்த போது பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது, கல்லா பெட்டியில் வைத்திருந்த பணம் மற்றும் செல்போன் ஆகியவை திருடப்பட்டிருந்தன.

இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மணிகண்டன் மற்றும் சஞ்சய்குமார் ஆகிய இருவரை கைது செய்தனர்.

Translate »
error: Content is protected !!