செங்கல்பட்டு – சென்னை கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை பாதிப்பு

செங்கல்பட்டு – சென்னை கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மறைமலை நகரில் மின்சார வழித்தடத்தில் கோளாறு ஏற்பட்டுள்ளதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

27 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள், அரசு கல்லூரிகளாக மாற்றம்

27 பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள், அரசு கல்லூரிகளாக மாற்றம் செய்து கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. இணை பேராசிரியர்கள் 27 பேரை முதல்வராக பதவி உயர்வு அளித்து கல்லூரி கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. 27 அரசு கலைக்கல்லூரிகளும் உள்ள பணியாளர்களுக்கு ஊதியத்தை…

108 ஆம்புலன்ஸ் வாகனம் விபத்தில் சிக்கியதில் தாய், மகள் உயிரிழப்பு

சிவகங்கை: சிவகங்கை ஊத்திகுளம் அருகே 108 ஆம்புலன்ஸ் வாகனம் விபத்தில் சிக்கியதில் தாய், மகள் உயிரிழந்தனர். நிவேதா என்பவரை பிரசவத்திற்காக அழைத்துச் சென்ற போது 108 ஆம்புலன்ஸ் வாகனம் விபத்தில் சிக்கியது. நிவேதா, அவரது வயிற்றில் இருந்த சிசு, உடன் சென்றா…

புதிய முறைப்படி டைப்ரைட்டிங் தேர்வு: ஐகோர்ட் உத்தரவு

புதிய முறைப்படி டைப்ரைட்டிங் தேர்வை நவ. 13க்குள் நடத்த ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. டைப்ரைட்டிங் இளநிலை தேர்வில், முதல் தாள் வேகத்தின் அடிப்படையிலும், இரண்டாவது தாள் கடிதம் மற்றும் அறிக்கை அடிப்படையிலும் நடக்கும். ஒரே நாளில் இருவேளைகளில் இத்தேர்வு நடக்கும். முதுநிலை…

மயிலாடுதுறை மீனவர் மீது இந்திய கடற்படை வீரர்கள் துப்பாக்கிச்சூடு

மயிலாடுதுறை மீனவர் மீது இந்திய கடற்படை வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளனர். ராமநாதபுரம், தெற்கு மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மயிலாடுதுறையை சேர்ந்த 10 மீனவர்கள் விசைப்படகில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இந்திய கடற்படை வீரர்கள் படகை நிறுத்த…

உத்தரகாண்டில் 3,400 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டல்

உத்தரகாண்ட் மாநிலத்திற்கு இன்று சென்றுள்ள பிரதமர் மோடி 3 ஆயிரத்து 400 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். உத்தரகாண்ட் சென்ற பிரதமர் மோடி கேதார்நாத் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தார் . பின்னர், கேதார்நாத் ரோப் கார் திட்டத்திற்கு…

நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்தால் நடவடிக்கை: டிஜிபி எச்சரிக்கை

தீபாவளி பட்டாசு வெடித்தல் குறித்து டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பசுமை பட்டாசுகள் மட்டுமே விற்கவும், வெடிக்கவும் வேண்டும். தீபாவளி அன்று காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரையிலும் என்று 2…

தீபாவளி பண்டிகை: ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு உயர்வு

தீபாவளி பண்டிகையை கொண்டாட குடும்பத்துடன் சொந்த ஊர் செல்பவர்கள் வருகிற 21ம் தேதி முதலே புறப்பட்டு செல்ல திட்டமிட்டுள்ளனர். இதனால், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு 1000 ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதற்கான முன்பதிவு தொடங்கி நடந்து வருகிறது. இந்நிலையில், தீபாவளி…

காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது

காஞ்சிபுரம், அக். 21 – காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ‘எவரி டேஷ் ஸ்போட்ஸ்’ காஞ்சிபுரம் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நேற்று நடந்தது. விழாவிற்கு காஞ்சிபுரம் மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ் தலைமைத் தாங்கினார். ‘எவரி டேஷ் ஸ்போர்ஸ்’ காஞ்சிபுரம்…

கான்டாக்ட் லென்ஸ் அணிந்திருப்போர் தீபாவளிக்கு உஷார்

கண்களில் கான்டாக்ட் லென்ஸ் அணிந்து பட்டாசு வெடிக்க வேண்டாமென அகர்வால் மருத்துவமனை டாக்டர் பரிந்துரைத்துள்ளார். பொதுவாகவே தீபாவளியின்போது கண் காயங்கள் அதிகம் ஏற்படும். அப்படியிருக்கையில் கான்டாக்ட் லென்ஸ் அணிந்திருப்பவர்கள் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கண்களில் அரிப்பு இருந்தால் விரல்களால் அதைத்…

Translate »
error: Content is protected !!