ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது கையெறி குண்டு தாக்குதல்

ஜம்மு -காஷ்மீரின் ஸ்ரீநகர் மாவட்டத்தில் உள்ள ஹரி சிங் சாலையில் இன்று பிற்பகல் 3 மணியளவில் பாதுகாப்பு படையினர் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, சில பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது கையெறி குண்டுகளை வீசிவிட்டு தப்பினர். இந்த தாக்குதலில் சில பொதுமக்கள் காயமடைந்தனர். மேலும் அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். குண்டுகளை வீசிவிட்டு தப்பியோடிய பயங்கரவாதிகளைத் தேடும் பணியில் பனி தீவிரமடைந்துள்ளது

 

Translate »
error: Content is protected !!