சென்னை விமான நிலைய குப்பைத்தொட்டியில் 23 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கப்பசை

சென்னை விமான நிலைய குப்பைத்தொட்டியில் கண்டெடுக்கப்பட்ட 23 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கப்பசையை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றி, விசாரணை நடத்துகின்றனர். சென்னை பன்னாட்டு விமான நிலைய முனையத்தை தூய்மை பணியாளர்கள் சுத்தம் செய்தபோது, குப்பைத்தொட்டியில் ஒரு பார்சல் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்த தகவலின் பேரில் பாதுகாப்பு அதிகாரிகள் வந்து பார்த்தபோது, அதில் அரைகிலோ தங்க பசை இருந்தது தெரியவந்தது. இதன் சர்வதேச மதிப்பு 23 லட்சம் ரூபாய் எனவும் சொல்லப்படுகிறது. இதையடுத்து அந்த பார்சலை பெற்றுக்கொண்ட சுங்கத்துறை அதிகாரிகள், அதுகுறித்து வழக்கு பதிந்து, சிசிடிவி கேமரா மூலம் தங்கத்தை கடத்தி வந்தவர் யார் என விசாரிக்கின்றனர்.

Translate »
error: Content is protected !!