இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு.. புதிதாக 26,727 பேருக்கு தொற்று உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 26,727 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், நாட்டில் மொத்த கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 37 லட்சத்து 66 ஆயிரம் 707 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 28,246 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், நாட்டில் கொரோனாவிலிருந்து மீண்டு வருபவர்களின் மொத்த எண்ணிக்கை 3 கோடி 30 லட்சத்து 43 ஆயிரத்து 144 ஆக உயர்ந்துள்ளது.

இருப்பினும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தாக்குதலில் 277 பேர் உயிரிழந்தனர். இதனால் , இந்தியாவில் மொத்த கொரோனா இறப்புகளின் எண்ணிக்கை 4 லட்சம் 48 ஆயிரம் 339 ஆக உயர்ந்துள்ளது.

Translate »
error: Content is protected !!