28–ந் தேதி விழுப்புரத்தில் அண்ணா தி.மு.க. மாநில மாநாடு

சென்னை,

வரும் 28–ந் தேதி விழுப்புரத்தில் மிக பிரமாண்டமாக அண்ணா தி.மு.. மாநில மாநாடு நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தமிழக சட்டசபை தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி விட்டன. அண்ணா தி.மு.. கூட்டணியில் பா.ஜனதா, பா..., தே.மு.தி.., .மா.கா. ஆகிய கட்சிகள் தொடருவது உறுதியாகி விட்டது.

பா.ஜனதா கூட்டணியை உறுதிப்படுத்தி விட்டது. மற்ற கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பிரச்சனைகள் தொடர்ந்து பேசப்பட்டு வருகிறது. இந்த பேச்சுவார்த்தை இறுதிக் கட்டத்தை எட்டியிருப்பதாகவும் கூறப்படுகிறது

கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து வரும் நிலையில் அண்ணா தி.மு.. கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டு அவர் தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்.

இதற்கிடையே அண்ணா தி.மு.. சார்பில் பிரமாண்டமாக மாநில மாநாடு வருகிற 28-ந்தேதி நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகிறது. விழுப்புரம் அருகே விக்கிரவாண்டி வி.சாலை பகுதியில் இதற்காக 100 ஏக்கர் பரப்பளவில் மைதானம் தயார்படுத்தப்படுகிறது.

இதற்கான பூமி பூஜை போடப்பட்டு பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. மாநாட்டில் லட்சக்கணக்கில் தொண்டர்களை திரட்டுவதற்காக அண்ணா தி.மு..வினர் ஏற்பாடு செய்து வருகிறார்கள். ஏற்கனவே 1998-ல் நெல்லையில் ஜெயலலிதா தலைமையில் நடைபெற்ற அந்த கட்சியின் வெள்ளி விழா மாநாடுதான் .தி.மு.. வெற்றிக்கு திருப்பு முனையாக அமைந்தது.

அதே போல் தேர்தலையொட்டி நடத்தப்படும் இந்த மாநாடும் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் வகையில் அமைய வேண்டும் என்று முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்அமைச்சர் .பன்னீர்செல்வமும் கட்சியினருக்கு உத்தரவிட்டுள்ளார்கள். மத்திய அமைச்சர் அமித்ஷா வருகிற 28-ந்தேதி தமிழகம் வருகிறார். ஊட்டி ராணுவ கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

அதைத் தொடர்ந்து தேர்தல் பிரச்சார கூட்டங்களிலும் கலந்து கொள்ளும் வகையில் அவரது பயணத் திட்டம் வகுக்கப்படுகிறது. விழுப்புரத்தில் நடைபெறும் அண்ணா தி.மு.. மாநாட்டிலும் அவர் பங்கேற்கிறார் என்று தெரிகிறது. அமித்ஷா வருகை உறுதியாகி இருக்கும் நிலையில் கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரையும் பங்கேற்க வைத்து தேர்தல் பிரச்சார கூட்டமாக நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

 

Translate »
error: Content is protected !!