பழமுதிர் நிலையத்தில் 3 அடி நீள உடும்பு – சத்தியமங்கலம் வனத்துறையினர் பிடித்தனர்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகே உள்ள பழமுதிர் நிலையம் கடையில் உடும்பு ஒன்று இருப்பதாக சத்தியமங்கலம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் பழமுதிர் நிலையம் கடைக்கு சென்று உடும்பை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கடையினுள் இருந்த பெட்டியின் உள்ளே சுமார் 3 அடி நீளம் உள்ள உடும்பு ஒன்று பதுங்கி இருந்ததை கண்டுபிடித்தனர். பின்னர் ஒரு சாக்கு பையைக் கொண்டு அந்த உடும்பை பிடித்த வனத்துறையினர் அதனை எடுத்துச் சென்று பண்ணாரி அடர்ந்த வனப்பகுதியில் பாதுகாப்பாக விட்டனர்.

Translate »
error: Content is protected !!