3 ஐஏஎஸ் அதிகாரிகள் பணி இடமாற்றம்

ஐஏஎஸ் அதிகாரிகள் 3 பேரை  பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தலைமை செயலாளர் வெளியிட்ட அரசாணையில், தமிழக அரசின் எல்காட் நிறுவன செயல் இயக்குநராக   அருண்ராஜ் நியமிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் கலை மற்றும் கலாச்சாரத்துறை ஆணையராக இருந்த ஜி பிரகாஷ், பால்வளம் மற்றும் பண்ணை வளர்ச்சித்துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும்,  அதேபோல் இந்திய தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையராக பணியாற்றி வரும் சுதீப் ஜெயின், தமிழக கனிமவள நிறுவன மேலாண்மை இயக்குனராக பணிஇடமாடற்றம் செய்யப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

Translate »
error: Content is protected !!