கத்தாரில் பிறந்து 3 வாரமே ஆன குழந்தை கொரோனா தொற்றால் உயிரிழப்பு

கத்தாரில் கொரோனா தொற்றால் பிறந்து 3 வாரமே ஆன குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாதிக்கப்பட்டு பலியான குழந்தைக்கு வேறு எந்தவிதமான மருத்துவ அறிகுறிகள் எதுவும் இல்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. கத்தாரில் கொரோனா தொற்றுக்கு பலியான இரண்டாவது குழந்தை இது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

UNICEF இன் தகவலின்படி, உலகளவில் கொரோனா வைரஸால் ஏற்படும் 3.5 மில்லியன் இறப்புகளில் 0.4 சதவீதம் 20 வயதுக்குட்பட்டவர்கள். இவர்களில் 9 வயது மற்றும் அதற்கு இளையவர்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Translate »
error: Content is protected !!