டெல்லியில் மேலும் 4 பேருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா இருப்பது உறுதி

டெல்லியில் மேலும் 4 பேருக்கு ஒமைக்ரான் வகை கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதனால், டெல்லியில் மொத்த பாதிப்பு 10 ஆக உயர்ந்துள்ளது.

இது தொடர்பாக பேசிய டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், ஒமைக்ரான் உறுதியானவர்கள் நலமுடன் இருப்பதாகவும் அவர்களில் ஒருவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

டெல்லியில் ஒமைக்ரான் நோய்த்தொற்றின் அறிகுறிகளுடன் 40 பேர் மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாகவும் அவர் கூறினார். மகாராஷ்டிராவில் 32 பேர், ராஜஸ்தானில் 17 பேர் என ஒமைக்ரான் வைரஸ் தொற்று நாட்டில் மொத்தமாக 77 ஆக அதிகரித்துள்ளது.

Translate »
error: Content is protected !!