பிப் 16 முதல் மார்ச் 6 வரை 45-வது புத்தக கண்காட்சி

 

 

45வது புத்தக கண்காட்சி வரும் பிப் 16 முதல் மார்ச் 6 வரை நடைபெற உள்ளது; தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு புத்தக கண்காட்சியை தொடங்கி வைக்க உள்ளார்.

தொடர்பாக, தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது பபாசி செயலாளர் முருகன் செய்தியாளர்களை சந்தித்தார், 45வது புத்தக கண்காட்சி வரும் பிப் 16 முதல், மார்ச் 6 வரை நடைபெற உள்ளது.

கொரோனா காரணமாக, ஜனவரியில் நடைபெற இருந்த புத்தக கண்காட்சி தற்போது நடைபெறுவதாகவும், புத்தக கண்காட்சியை முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார் என்றும் தெரிவித்தார். அதுமட்டுமின்றி சென்னை முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு இலவசமாக 10 லட்சம் டிக்கெட்டுகள் அளிக்கப்பட உள்ளதாகவும், குழந்தைகளுக்கு படிப்பு, எழுத்து சம்பந்தமாக அரங்கு அமைக்கப்பட உள்ளது என்று தெரிவித்தனர்.

 

Translate »
error: Content is protected !!