கிரீஸ் நாட்டில் 5.7 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான கிரீஸ் நாட்டில் 5.7 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏதேனும் சேதம் ஏற்பட்டதா? என்பது பற்றி எந்த தகவலும் இல்லை.

முன்னதாக, இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவானதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்தது. கிரீஸ் நாட்டில் உள்ள கிரீட் தீவில் நிலநடுக்கம் உணரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். நிலநடுக்கத்தால் அப்பகுதியில் பெரிய அளவில் சேதம் எதுவும் ஏற்படவில்லை என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 

Translate »
error: Content is protected !!