68 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட விவகாரம்

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க கோரி திமுக எம்.பி-க்கள், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து முறையிட்டனர். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திமுக மக்களவை உறுப்பினர் டி.ஆர் பாலு, இந்திய மீனவர்களை கைது செய்து அடித்து துன்புறுத்துவது, படகுகளை சேதப்படுத்துவது போன்ற செயல்களில் இலங்கை கடற்படை ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டினார். தற்போது கைதான 68 மீனவர்களைையும் விடுவிக்க நடவடிக்கை எடுப்பது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்தியதாகவும் கூறினார். நீட் விலக்கு மசோதாவினை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்காத தமிழக ஆளுநர் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்களவையில் பேசியதாகவும் கூறினார்

Translate »
error: Content is protected !!