75 வது சுதந்திர தினம்.. டெல்லியில் பலத்த கண்காணிப்பு

சுதந்திர தினம் நாடு முழுவதும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

இதற்கிடையே, சுதந்திர தினத்தை முன்னிட்டு எந்த ஒரு அசம்பாவிதங்களும் நடந்து விட கூடாது என டெல்லி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இரவு பகலாக போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் டெல்லியில் உள்ள விடுதிகளிலும் சோதனைகள் நடத்தப்படுகின்றன. இதை தொடர்ந்து செல்போன் நிறுவனங்களுக்கும் ஓர் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன் படி உரிய அடையாள அட்டை இல்லாமல் சிம் கார்டுகளை வழங்க கூடாது என்று செல்போன் நிறுவனங்களுக்கும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

Translate »
error: Content is protected !!