சுமார் எட்டு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு உத்தரபிரதேசத்தில் 180 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் பாதுகாப்பாக மீட்கப்பட்டான்.
ஆக்ரா,
சோத்லால் உத்தரபிரதேசத்தில் ஆக்ரா அருகே தரியா கிராமத்தைச் சேர்ந்தவர். அவரது நான்கு வயது மகன் சிவா நேற்று காலை விளையாடிக் கொண்டிருந்தான். காலை 7.30 மணியளவில் அச்சிறுவன் அங்கு மூடப்படாத 180 அடி ஆழமான கிணற்றில் தவறி விழுந்தான்.
போலீசாரும் தீயணைப்பு படையினரும் தகவல் அறிந்து பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மேலும், சிறுவனை மீட்பதில் 32 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் 28 பேர் கொண்ட மாநில பேரிடர் மீட்புப் படை ஆகியவை ஈடுபட்டன.
காலை 9 மணிக்கு தொடங்கிய மீட்பு நடவடிக்கை மாலை வரை தொடர்ந்தது. ஆரம்பத்தில் சிறுவன் 90 அடி ஆழத்தில் சிக்கியிருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். அதைத் தொடர்ந்து, சிறுவனுக்கு ஆக்ஸிஜன், குளுக்கோஸ் மற்றும் பிஸ்கட் வழங்கப்பட்டது.
8 மணி நேர தீவிர முயற்சிக்கு பின்னர் சிறுவன் சிவா உயிருடன் மீட்கப்பட்டான். மீட்பு நடவடிக்கைகள் காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 4.30 மணிக்கு முடிந்தது. சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் நலமாக இருப்பதாக கூறினார். இருப்பினும், சிறுவன் சோர்வாக இருந்ததால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான்.