காஷ்மீர் சாலை விபத்தில் 8 பேர் உயிரிழப்பு.. பிரதமர் மோடி இழப்பீடு அறிவிப்பு

ஜம்மு காஷ்மீர் மாநிலம் தாத்ரி பகுதியில் இருந்து தோடா நோக்கி சிற்றுந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது திடீரென அந்த சிற்றுந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானது. அந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தாகவும், 12 பேர் காயமடைந்ததாகவும், மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும் தோடா மாவட்ட கூடுதல் எஸ்.பி. தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சிற்றுந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 இழப்பீடு வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்

Translate »
error: Content is protected !!