அண்ணா அறிவாலயத்தில் திமுக- காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கியது..!

சென்னை,

சட்டசபை தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுககாங்கிரஸ் இடையேயான அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருகிறது.

சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் இடம் பெற்றுள்ளது. திமுகவிடம் காங்கிரஸ் 35 முதல் 40 இடங்கள் வரை கேட்டிருக்கிறது. ஆனால் திமுகவோ 20 முதல் 25 தொகுதிகளை ஒதுக்க முடியும் என கூறியுள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர்களான உம்மன் சாண்டி, ரந்தீப் சுர்ஜிவாலா, தினேஷ் குண்டுராவ் உள்ளிட்டோர் நேற்று சென்னை வந்தனர்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் திமுகவுடனான தொகுதி பங்கீடு தொடர்பாக ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையைத் தொடர்ந்து இன்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குழு சென்னை அண்ணா அறிவாலயம் சென்றது.

அண்ணா அறிவாலயத்தில் திமுக குழுவுடன் காங்கிரஸ் தரப்பு பேச்சுவார்த்தையை தொடங்கியது. திமுக சார்பில் துரைமுருகன், டிஆர் பாலு, கனிமொழி, டிகேஎஸ் இளங்கோவன்; காங்கிரஸ் சார்பில் உம்மன் சாண்டி, ரந்தீப் சுர்ஜிவாலா, தினேஷ் குண்டுராவ், கே.எஸ். அழகிரி ஆகியோர் இந்த தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை நடத்தி வருகின்றனர்.

 

Translate »
error: Content is protected !!