தி.மு.க. கூட்டணியை வெற்றி பெற வைப்பது என திராவிட அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு

கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.. கூட்டணியை வெற்றி பெற வைப்பது என திராவிட அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

கோவை டாடாபாத்தில் உள்ள மாவட்ட தி.மு.. அலுவலகத்தில் திராவிட அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம் தமிழ்நாடு திராவிடர் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் கா.சு.நாகராஜன் தலைமையில் நடைபெற்றது.

அப்போது, கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.. கூட்டணியின் வெற்றிக்கு பாடுபடுவது, நூதன முறையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவது, அழிந்து வரும் சமூக நீதியை இளைஞர்கள் மூலம் மக்கள் மத்தியில் கொண்டு செல்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஆலோசனைக் கூட்டத்தில், திராவிடர் தமிழர் கட்சி தலைவர் வழக்கறிஞர் வெண்மணி, திராவிடர் இதழின் ஆசிரியர் இரா.பன்னீர்செல்வம், திராவிடர் விடுதலை கழகத்தைச் சேர்ந்த நேருதாஸ், சமூக நீதி பாதுகாப்பு கூட்டு இயக்கத்தைச் சேர்ந்தவழக்கறிஞர் மதிவாணன் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட அமைப்பின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Translate »
error: Content is protected !!