பெரியகுளம் சட்டமன்ற திமுக வேட்பாளர் கே.எஸ் சரவணகுமார் தீவிர வாக்கு சேகரிப்பு

பெரியகுளம் சட்டமன்ற திமுக வேட்பாளர் கே.எஸ் சரவணகுமார் பெரியகுளம் ஒன்றிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பு.,

திமுக அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம் என உறுதி.,

பொதுமக்கள் உற்சாகம் வரவேற்பு அளித்தனர்..

தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற திமுக வேட்பாளர் கே.எஸ் சரவணகுமார். பெரியகுளம் ஒன்றிய பகுதிகளான வடபுதுப்பட்டி ஊஞ்சாம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமையும்,

அதேபோல தலைவர் ஸ்டாலின் அறிவித்த தேர்தல் அறிக்கை அனைத்தும் நிறைவேற்றித் தருவேன்.

மகளிர் சுய உதவி குழுக்களின் பெற்ற கடனை ரத்து செய்வோம், மகளிருக்கு இலவச பேருந்து பஸ்பாஸ் வழங்குவோம், மாதம் மாதம் 1000 ரூபாய் உரிமைப் பணம் வழங்குவோம்  உள்ளிட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம் என தேர்தல் வாக்குறுதி கொடுத்தார்.

இந்த தேர்தல் பிரச்சாரத்தில் திமுக ஒன்றிய செயலாளர் எல்.எம்.பாண்டி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் நாகரத்தினம் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி பொறுப்பாளர்கள் தொண்டர்கள் கலந்து கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க பொதுமக்களை கேட்டுக் கொண்டனர்..

Translate »
error: Content is protected !!