அதிமுகவின் 49வது ஆண்டு விழா: ஈபிஎஸ்- ஓபிஎஸ் கொடியேற்றினர்

அ.தி.மு.க.வின் 49வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, சேலத்தில் அக்கட்சி எடப்பாடி பழனிசாமியும், சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம்மும் கட்சிக் கொடியை ஏற்றி வைத்தனர்.

ஆளும் அதிமுக, இன்று தனது 49வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. கடந்த 1972ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ம் தேதி, மறைந்த முதல்வர் எம்.ஜி.ராமச்சந்திரன், அ.தி.மு.க.வை தொடங்கினார். 

இன்று, அ.தி.மு.க.வின் 49-வது ஆண்டு தொடக்க விழாவை கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொது மக்கள் என அனைவரும் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் எடப்பாடியில் உள்ள சிலுவம்பாளையத்தில், அதிமுகவின் 49வது ஆண்டு தொடக்க விழாவில், முதல்வரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான  எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். 

அலங்கரிக்கப்பட்ட எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவப் படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதை  தொடர்ந்து, அ.தி.மு.க. கொடியை ஏற்றி வைத்து, தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.


அதேபோல், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் திருவுருவச் சிலைக்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து, கட்சிக் கொடியை ஏற்றிவைத்து, தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.

இதேபோல் தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் இனிப்பு வழங்கி அதிமுகவின் 49ம் ஆண்டு தொடக்க விழாவை கொண்டாடி வருகின்றனர். 

Translate »
error: Content is protected !!