வெவ்வேறு பகுதிகளில் ஓட்டுக்கு பணம் பட்டுவாடா..? அதிமுக உறுப்பினர்கள் கைது..!

உத்திரமேரூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட சாலவாக்கம் அடுத்த சித்தனக்காவூரில் .தி.மு.., வேட்பாளருக்கு ஓட்டளிக்க கூறி வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதாக, தேர்தல் ஆணையத்திற்கு புகார் சென்றது.

இதையடுத்து தேர்தல் பறக்கும் படை குழுவினர் சித்தனக்காவூரில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சித்தனக்காவூர் .தி.முக., பிரமுகர் வேங்கப்பன் என்பவரிடமிருந்து, வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக வைத்திருந்த 20000 ரூபாயை பறிமுதல் செய்து, அவரை சாலவாக்கம் போலீசில் ஒப்படைந்தனர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்..

இதேபோல் ஒரகடம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சுற்றுவட்டார கிராம பகுதிகளில் அதிமுக உறுப்பினர் ராமதாஸ் அதிமுக கட்சிக்கு ஓட்டளிக்க வேண்டும் என கூறி பொதுமக்களுக்கு பணம் விநியோகம் செய்துகொண்டிருந்தார் இது தொடர்பாக எழுந்த புகாரில் ராமதாசை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் அவரிடமிருந்து ஐந்தாயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது..

Translate »
error: Content is protected !!