இந்தியாவில் ஒரே நாளில் 1,84,372 பேருக்கு கொரோனா

இந்தியாவில் ஒரே நாளில் 1,84,372 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியே 38 லட்சத்து 73 ஆயிரத்தை கடந்தது.

தற்போது 13.65 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதித்த 1,027 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 1,72,085 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 88.92 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.24 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 9.84 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இந்தியாவில் நேற்று (ஏப்.,13) ஒரே நாளில் 14,11,758 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக .சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 26 கோடியே 06 லட்சத்து 18 ஆயிரம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. இன்று (ஏப்ரல் 14-ம் தேதி) காலை  நிலவரப்படி உலகில் கொரோனாவால் 13 கோடியே 80 லட்சத்து 24 ஆயிரத்து 148 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 29 லட்சத்து 72 ஆயிரத்து 039 பேர் பலியாகினர். 11 கோடியே 10 லட்சத்து 59 ஆயிரத்து 757 பேர் மீண்டுள்ளனர்.

 

Translate »
error: Content is protected !!