தகனமேடையில் தந்தை உடலை தொட்டு பார்த்து அழுத மகள்… கற்பூரம் ஏற்றி இறுதி சடங்கு செய்தார்

தகனமேடையில் விவேக்கின் உடலை தொட்டு பார்த்து அழுத மகள், கற்பூரம் ஏற்றி இறுதி சடங்குகளை செய்த சோகம் நடந்துள்ளது.

நடிகர் விவேக்கின் இறுதி சடங்குகளை செய்த மகள் மின் மயானத்தில் நடிகை ரேகா, டிவி நடிகை நிலானி உள்ளிட்டோர் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டார்விவேக்கின் உடலுக்கு மகள் தேஜஸ்வினி இறுதி சடங்குகளை செய்தார்.

மகன் இல்லாத நிலையில் அவரது இளைய மகள் அணிந்திருந்த உடையின் மீது வேட்டியை கட்டிக் கொண்டு இறுதி சடங்குகளை செய்தார். தகனமேடையில் வைக்கப்பட்ட விவேக்கின் முகம் மூடப்பட்ட நிலையில் அவரது உடலை தொட்டு பார்த்த தேஜஸ்வினி அழுதார். அவரை நடிகை நிலானி தேற்றினார். பின்னர் அவரது உடலுக்கு சந்தன கட்டைகள் வைத்து நெய்யை ஊற்றினார்.

இதையடுத்து கற்பூரத்தை வைத்து ஏற்றினார். அப்போது தேஜஸ்வினி கதறி அழுதது காண்போரை கலங்கடித்தது. விவேக்கின் உடல் எரிந்து கொண்டே மெஷினி மூலம் உள்ளே சென்றது. அதை பார்த்து துக்கம் தாளாமல் அழுத தேஜஸ்வினியை கட்டி அணைத்தபடி நடிகை நிலானி ஆறுதல் கூறி அந்த இடத்தை விட்டு அழைத்து சென்றார்.

Translate »
error: Content is protected !!