நாசிக்மருத்துவமனையில் ஆக்ஸிஜன் வாயுக்கசிவால் உயிரிழந்த 22 பேரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்

மகாராஷ்டிரத்தின் நாசிக்மருத்துவமனையில் ஆக்ஸிஜன் நிரம்பும் போது திடீரென வாயுக்கசிவால் உயிரிழந்த 22 பேரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

நாசிக்மாவட்டத்தில் உள்ள ஜாகிர்உசேன் மருத்துவமனையில் டேங்கரில் இருந்து சிலிண்டர்களுக்கு ஆக்சிஜன் வாயு மாற்றப்பட்டு நோயாளிகளின் சிகிச்சைக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில்,எதிர்பாராத விதமாக வாசிக்கசிவு ஏற்பட்டு டேங்கரில் இருந்துஆக்சிஜன் வாயு பெருமளவு கசிந்தது. இதனால், கொரோனா நோயாளிகளுக்கு சரிவர ஆக்ஸிஜன் வழங்க முடியாததால், அங்குள்ள 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், நாசிக் மருத்துவமனையில் வாயுக் கசிவால் உயிரிழந்த சம்பவம் வேதனையளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டார்.

Translate »
error: Content is protected !!