மாவட்ட ஆட்சித் தலைவர்கள் திடீரென மாற்றம்

தமிழகத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் ஆட்சித் தலைவர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: இதுவரை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியத் தலைவராக இருந்து வந்த பொன்னையா, இனி திருவள்ளூர் ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுவரை திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவராக மகேஸ்வரி, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் மலர்விழி கரூர் மாவட்ட ஆட்சியராகவும், தருமபுரி ஆட்சியராக கார்த்திகாவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். கரூர் மாவட்ட ஆட்சித் தலைவராக இருந்த அன்பழகன், மதுரை மாவட்டத்திற்கும் , பெரம்பலூர் ஆட்சித் தலைவர் சாந்தா திருவாரூர் மாவட்டத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி ஆட்சித் தலைவராக அரவிந்த் ஐஏஎஸ், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக வெங்கட பிரியா நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், கூடுதல் தலைமைச் செயலாளர் அபூர்வ வர்மா, விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார். பதிவுத்துறை ஐஜியாக சங்கரும், தமிழ்நாடு மின் பகிர்மானக்கழக மேலாண் இயக்குநராக பிரசாந்த் மு வடநேரே நியமனம் செய்யப்பட்டுள்ளதாக, அரசு செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

Translate »
error: Content is protected !!