குறைந்து வரும் கொரோனா பாதிப்பு

கொரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவில் குறைந்து வருகிறது. மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கை,

இந்தியாவில் புதிதாக 1,34,154 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது . இதனால்  இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,84,41,986 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 2,887 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்தம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,37,989 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 2,11,499 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்தம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,63,90,584 ஆக அதிகரித்துள்ளது.

 

 

Translate »
error: Content is protected !!