இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 54,069 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 54,069 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுகாதார துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 54,069 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,00,82,778  ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் ஒரே நாளில் 1,321 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.இதனால் மொத்த இறப்பு எண்னிக்கை 3,91,981 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றில் இருந்து நேற்று ஒரே நாளில் 68,885 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,90,63,740 ஆக அதிகரித்துள்ளதுநாடு முழுவதும் 6,27,057 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Translate »
error: Content is protected !!