ஜம்மு-காஷ்மீரில், முன்னாள் போலீஸ் அதிகாரி, மனைவி பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை

ஜம்முகாஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஹரிபரிகம் கிராமத்தில் நேற்று இரவு முன்னாள் போலீஸ் அதிகாரி மற்றும் அவரது மனைவி பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டனர். முன்னாள் போலீஸ் அதிகாரி பயஸ் அகமது மற்றும் அவரது மனைவி ராஜ பேகம் ஆகியோரின் வீட்டிற்குள் பயங்கரவாதிகள் புகுந்து அவர்கள் சுட்டுக் கொன்றனர்.

பயங்கரவாத துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒரு போலீஸ் அதிகாரியின் மகள் ராபியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னாள் போலீஸ்அதிகாரியை சுட்டுக் கொன்ற பயங்கரவாதியை ராணுவ படையினர் தேடி வருகின்றனர். ஜம்மு விமானப்படை தளத்தில் குண்டு வெடித்தபோது முன்னாள் அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Translate »
error: Content is protected !!