கொச்சியில் உள்ள கல்வித்துறை அலுவலகத்தை லட்சத்தீவிற்கு மாற்ற லட்சத்தீவு நிர்வாகம் உத்தரவு

தற்போது லட்சத்தீவு நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள அறிவிப்பால் மேலும் சர்ச்சை கிளம்பியுள்ளது . கேரளாவின் கொச்சியில் லட்சத்தீவின் நிர்வாகத்தின் கீழ் ஒரு கல்வி அலுவலகம் உள்ளது. கேரளாவின் பல்வேறு பகுதிகளில் படிக்கப் போகும் மாணவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளைச் செய்ய இந்த அலுவலகம் செயல்பட்டு வந்தது.

இந்த அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க ஏற்கனவே நிர்வாகத்தால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், இங்கு பணிபுரியும் அனைத்து ஊழியர்களையும் லட்சத்தீவு காவரட்டி அலுவலகத்திற்கு வருமாறு லட்சத்தீவு நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. அலுவலகத்தில் உள்ள அனைத்து உபகரணங்களையும் காவரட்டிக்கு கொண்டு வரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

லட்சத்தீவு எம்.பி முகமது பைசல் இந்த உத்தரவை கடுமையாக கண்டித்துள்ளார். இந்த உத்தரவு கேரளாவின் பல்வேறு கல்வி நிறுவனங்களில் படிக்கும் லட்சத்தீவைச் சேர்ந்த சுமார் 4,000 மாணவர்களைப் பாதிக்கும் என்றார். இந்த உத்தரவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்வதாக அவர் கூறினார்.

 

Translate »
error: Content is protected !!