கொரோனாவுக்கு எதிராக போராடும் மருத்துவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் – கெஜ்ரிவால்

கொரோனாவுக்கு எதிராக போராடும் மருத்துவர்களுக்கு இந்த ஆண்டு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

இதை குறித்து கெஜ்ரிவால் டுவிட்டரில் கூறியது.

கொரோனாவுக்கு எதிராக போராடும் அனைத்து மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துணை மருத்துவ நிபுணர்களுக்கும் பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும். கொரோனாவால் இறந்த மருத்துவர்களுக்கு நாங்கள் செலுத்தும் உண்மையான அஞ்சலி இதுதான்.

இதுதான் தங்களின் குடும்பத்தினரையும், உயிரையும் கருதாமல் மக்களுக்காகப் பணியாற்றும் மருத்துவர்களுக்குச் செய்யும் உண்மையான மரியாதையாக அமையும். இதற்காக முழு தேசமும் மகிழ்ச்சியாக இருக்கும். என அவர் பதிவிட்டார்.

 

Translate »
error: Content is protected !!