ஜம்மு-காஷ்மீரில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை..!

ஜம்முகாஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் மறைத்து பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கினர்.

அப்போது அங்கு மறைந்திருந்த சில தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாதுகாப்பு படையினரின் தாக்குதலில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் ஒருவர் பாகிஸ்தானின்ல க்ஷர்தொய்பா அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவர் என்றும் மற்றவர் காஷ்மீரைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது. அவர்களிடமிருந்து வெடிமருந்துகளும் நவீன துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இன்னும் பலர் பதுங்கியிருப்பதாக கருதப்படுவதால் ராணுவ வீரர்கள் அங்கு ஒரு தேடலில் ஈடுபட்டுள்ளார்.

Translate »
error: Content is protected !!